திருவிவிலியம் (The Holy Bible)
என்பது கிறிஸ்தவர்களுடைய சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள புனித நூல்.
அதை ஒரு நூல் என்பதைவிட நூலகம் என்றே கூறிவிடலாம். ஏனென்றால் விவிலியம்
என்பது பல நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல் தொகுப்பு. "மனித மொழியில் அமைந்த
கடவுளின் வார்த்தை" என விவிலியத்தைக் கிறிஸ்தவர் போற்றுவர்.
விவிலியம் என்பதற்குக் கிறிஸ்தவ
தமிழ் மரபில் "சத்திய வேதம்", "வேதாகமம்", "திருமறைநூல்", "திருவிவிலியம்"
என்னும் பல பெயர்கள் உண்டு.
கிறிஸ்தவர்கள் விவிலியத்தைப் "பழைய ஏற்பாடு" என்றும் "புதிய ஏற்பாடு" என்றும் இரு பெரும் பாகங்களாகப் பிரிப்பர்.
பழைய ஏற்பாட்டு நூல்கள் இயேசு
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலும், புதிய ஏற்பாட்டு நூல்கள் அவருக்குப்
பிற்பட்ட காலத்திலும் எழுந்தன.
இன்றும்கூட, பழைய ஏற்பாட்டு
ஆகமங்கள் யூத மக்களின் சமய நூலாக விளங்குகின்றன. அந்நூல்களில்
பெரும்பான்மையானவை (39) எபிரேய மொழியிலும், ஒரு சில (7) கிரேக்க
மொழியிலும் எழுதப்பட்டவை ஆகும். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட விவிலிய
நூல்கள் எல்லா யூதராலும் அதிகாரப்பூர்வமான திருநூல் தொகுப்பில்
ஏற்கப்படவில்லை. இந்த வேறுபாடு கிறிஸ்தவர்களுடைய சபைகளிலும் துலங்குகிறது.
அதாவது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் எபிரேய மற்றும்
கிரேக்க நூல்களைத் திருநூல் முறையில் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால்,
சீர்திருத்த சபையினர் (புரோட்டஸ்டாண்டு) எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய
ஏற்பாட்டு நூல்களை மட்டுமே திருநூலின் பகுதிகளாக ஏற்பர். கிரேக்க மொழியில்
எழுதப்பட்ட நூல்களை அதிகாரப்பூர்வமானவையாக ஏற்பதில்லை. கத்தோலிக்க
கிறிஸ்தவர்கள் இந்நூல்களை "இணைத் திருமுறை நூல்கள்" (Deutero-canonical) என்று அழைப்பர். சீர்திருத்த சபையினர் "விவிலியப் புற நூல்கள்" (Apocrypha) என்பர்.
புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ஐயும்
எல்லாக் கிறிஸ்தவ சபையினரும் அதிகாரப்பூர்வமானவையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நூல்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டவையாகும்.
என்பது கிறிஸ்தவர்களுடைய சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள புனித நூல்.
அதை ஒரு நூல் என்பதைவிட நூலகம் என்றே கூறிவிடலாம். ஏனென்றால் விவிலியம்
என்பது பல நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல் தொகுப்பு. "மனித மொழியில் அமைந்த
கடவுளின் வார்த்தை" என விவிலியத்தைக் கிறிஸ்தவர் போற்றுவர்.
விவிலியம் என்பதற்குக் கிறிஸ்தவ
தமிழ் மரபில் "சத்திய வேதம்", "வேதாகமம்", "திருமறைநூல்", "திருவிவிலியம்"
என்னும் பல பெயர்கள் உண்டு.
கிறிஸ்தவர்கள் விவிலியத்தைப் "பழைய ஏற்பாடு" என்றும் "புதிய ஏற்பாடு" என்றும் இரு பெரும் பாகங்களாகப் பிரிப்பர்.
பழைய ஏற்பாட்டு நூல்கள் இயேசு
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலும், புதிய ஏற்பாட்டு நூல்கள் அவருக்குப்
பிற்பட்ட காலத்திலும் எழுந்தன.
இன்றும்கூட, பழைய ஏற்பாட்டு
ஆகமங்கள் யூத மக்களின் சமய நூலாக விளங்குகின்றன. அந்நூல்களில்
பெரும்பான்மையானவை (39) எபிரேய மொழியிலும், ஒரு சில (7) கிரேக்க
மொழியிலும் எழுதப்பட்டவை ஆகும். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட விவிலிய
நூல்கள் எல்லா யூதராலும் அதிகாரப்பூர்வமான திருநூல் தொகுப்பில்
ஏற்கப்படவில்லை. இந்த வேறுபாடு கிறிஸ்தவர்களுடைய சபைகளிலும் துலங்குகிறது.
அதாவது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் எபிரேய மற்றும்
கிரேக்க நூல்களைத் திருநூல் முறையில் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால்,
சீர்திருத்த சபையினர் (புரோட்டஸ்டாண்டு) எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய
ஏற்பாட்டு நூல்களை மட்டுமே திருநூலின் பகுதிகளாக ஏற்பர். கிரேக்க மொழியில்
எழுதப்பட்ட நூல்களை அதிகாரப்பூர்வமானவையாக ஏற்பதில்லை. கத்தோலிக்க
கிறிஸ்தவர்கள் இந்நூல்களை "இணைத் திருமுறை நூல்கள்" (Deutero-canonical) என்று அழைப்பர். சீர்திருத்த சபையினர் "விவிலியப் புற நூல்கள்" (Apocrypha) என்பர்.
புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ஐயும்
எல்லாக் கிறிஸ்தவ சபையினரும் அதிகாரப்பூர்வமானவையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நூல்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டவையாகும்.