அன்பார்ந்த இணைதள நண்பர்களே!
பாடல்கள் மனிதனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்
மிகச் சிறந்த மொழி நடை. எத்தனை மொழிகளில் என்னென்ன கவி நயத்துடன்
பாடல்களை வடிவமைத்தாலும்,உலக வரலாற்றல் ஒரே ஒரு பாடல் மட்டும்தான்
எல்லோராலும் எல்லா காலத்திலும் பாராட்டப்படுகிறது, பாடப்படுகிறது. அது
நம் அன்னை மரியாளின் பாடல்.
இப்பாடலை எல்லா வயதினரும் பாடலாம்.
எல்லா சூழ்நிலையிலும் பாடலாம். இன்பத்திலும் பாடலாம். துன்பத்திலும்
பாடலாம். வெற்றியிலும் பாடலாம். தோல்வியிலும் பாடலாம். உயர்விலும்
பாடலாம். தாழ்விலும் பாடலாம். ஆயினும் இப் பாடலின் முழுமையை, நிறைவை
ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.
அன்னை
மரியாளிடமிருந்த அதே மனநிலை உள்ளவர்கள் மட்டுமே இப்பாடலின் சிறப்பைப்
பெற முடியும். ஆண்டவரில் உள்ளம் மகிழ வேண்டும். "நான் ஆண்டவரின் அடிமை.
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற இறை திட்டத்திற்கு கீழ்ப்படிதலும்
அர்ப்பணமும் தேவை. ஏழைக்கு இரங்கும் உள்ளம், உதவும் மனம்,தாழ்ச்சி
நிறைந்த செயல்பாடு இவை இப் பாடலைப் பாட வலுவூட்டும்.
எந்தச்
சமுதாயத்தில் இப்பாடலைப் பாடும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதோ, அந்த சமுகம்
ஏற்றத்தாழ்வின்றி செழிக்கும். யாருடைய குடும்பங்கள் இந்த மனநிலையில்
உருவாகுகிறதோ, அக்குடும்பங்கள் குறைவின்றி வாழும்.
அருட்திரு ஜோசப் லியோன்
பாடல்கள் மனிதனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்
மிகச் சிறந்த மொழி நடை. எத்தனை மொழிகளில் என்னென்ன கவி நயத்துடன்
பாடல்களை வடிவமைத்தாலும்,உலக வரலாற்றல் ஒரே ஒரு பாடல் மட்டும்தான்
எல்லோராலும் எல்லா காலத்திலும் பாராட்டப்படுகிறது, பாடப்படுகிறது. அது
நம் அன்னை மரியாளின் பாடல்.
இப்பாடலை எல்லா வயதினரும் பாடலாம்.
எல்லா சூழ்நிலையிலும் பாடலாம். இன்பத்திலும் பாடலாம். துன்பத்திலும்
பாடலாம். வெற்றியிலும் பாடலாம். தோல்வியிலும் பாடலாம். உயர்விலும்
பாடலாம். தாழ்விலும் பாடலாம். ஆயினும் இப் பாடலின் முழுமையை, நிறைவை
ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.
அன்னை
மரியாளிடமிருந்த அதே மனநிலை உள்ளவர்கள் மட்டுமே இப்பாடலின் சிறப்பைப்
பெற முடியும். ஆண்டவரில் உள்ளம் மகிழ வேண்டும். "நான் ஆண்டவரின் அடிமை.
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற இறை திட்டத்திற்கு கீழ்ப்படிதலும்
அர்ப்பணமும் தேவை. ஏழைக்கு இரங்கும் உள்ளம், உதவும் மனம்,தாழ்ச்சி
நிறைந்த செயல்பாடு இவை இப் பாடலைப் பாட வலுவூட்டும்.
எந்தச்
சமுதாயத்தில் இப்பாடலைப் பாடும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதோ, அந்த சமுகம்
ஏற்றத்தாழ்வின்றி செழிக்கும். யாருடைய குடும்பங்கள் இந்த மனநிலையில்
உருவாகுகிறதோ, அக்குடும்பங்கள் குறைவின்றி வாழும்.
அருட்திரு ஜோசப் லியோன்