''மரியா, 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' என்றார்'' (லூக்கா 1:47-48)
அன்பார்ந்த இணைதள நண்பர்களே!
-- எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற மரியா
''பேறுபெற்றவர்'' எனப் போற்றப்பட்டார் (காண்க: லூக் 1:42,45). மரியாவின்
வயிற்றில் குழந்தையாக இயேசு இருக்க, எலிசபெத்தின் வயிற்றில் குழந்தையாக
இருந்த யோவான் ''மகிழ்ச்சியால் துள்ளினார்'' (காண்க: 1:41,44).
இந்நிகழ்ச்சிகளைக் கண்ட மரியாவின் உள்ளம் இறைப் பிரசன்னத்தால் நிறைகின்றது;
அவரது இதயத்தில் நன்றியுணர்வு ததும்புகிறது; தம் இதய உணர்வுகளை மரியா
இனிமைமிகு பாடலாக வெளிப்படுத்துகிறார்: ''ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப்
பெருமைப்படுத்துகின்றது'' எனத் தொடங்குகின்ற மரியாவின் பாடல்
எலிசபெத்தின் வாயிலிருந்து புறப்பட்டிருக்கலாம், அல்லது இருவருமே இணைந்து
அதைப் பாடியிருக்கலாம். எவ்வாறாயினும் அப்பாடல் பழைய ஏற்பாட்டு
நிகழ்ச்சியொன்றை நமக்கு நினைவுபடுத்துகின்றது. அன்னா என்னும் பெண்மணி
குழந்தைப் பேறின்றி இருந்தார். அவருக்குக் கடவுளின் அருளால் குழந்தை
பிறக்கிறது. அக்குழந்தைக்கு சாமுவேல் என்று பெயர். சாமுவேலின் பிறப்பைக்
கொண்டாடிப் பாடிய அன்னா கடவுள் தம் வாழ்வில் புரிந்த அரும் செயலை வியந்து
போற்றினார். அவர் பாடிய பாடலின் சில அம்சங்கள் மரியா பாடிய பாடலிலும்
உள்ளன (காண்க: 1 சாமு 2:1-10). அதற்கு முற்பட்ட காலத்தில், கடவுள் புரிந்த
அரும் செயல்களை வியந்து தெபோரா என்னும் பெண்மணி பாடிய பாடலின்
எதிரொலிப்பையும் மரியாவின் பாடலில் காணலாம் (காண்க: நீத 2:2-31).
-- கடவுளை நம்புகின்ற மனிதரை அவர் ஒருபோதும்
கைவிடமாட்டார் என்னும் உறுதியான நம்பிக்கை மரியாவின் பாடலில்
காணக்கிடக்கிறது. அதுபோல, கடவுளைப் புறக்கணித்து, தம் மனம் போன போக்கில்
வாழ்வோர் இவ்வுலகில் அதிகாரமும் செல்வமும் கொண்டிருந்தாலும் தங்கள்
நிலையிலிருந்து ஒருநாள் வீழ்ச்சியடைவர் (காண்க: லூக் 1:52-53). மரியாவின்
மகிழ்ச்சிப் பாடலுக்கு அடிப்படையாக அமைவது யாது? கடவுளின் பார்வையில்
''அடிமை'' போல் இருந்த மரியா ஏற்கெனவே கடவுளுக்குத் தாம் அடிமை என
ஏற்றிருந்தார் (காண்க: லூக் 1:38). கடவுளுக்கு எது விருப்பமோ அதையே தம்
வாழ்வில் நிறைவேற்றுவதாகவும் கூறியிருந்தார். எனவே, கடவுளின் திருவுளம்
தம் வாழ்வில் நிறைவேறட்டும் என மரியா தம்மை முற்றிலுமாகக் கடவுளின்
கைகளில் ஒப்படைத்திருந்தார் (காண்க: லூக் 1:38). மரியாவின் தாழ்ச்சியைக்
கண்ட கடவுள் அவரை மிகவே உயர்;த்தினார். உலக மீட்பராக வந்த மெசியாவின்
தாயாகின்ற பேற்றினை அவருக்கு அளித்தார். மரியாவிடம் துலங்கிய தாழ்ச்சி நம்
வாழ்விலும் வெளிப்பட வேண்டும். மரியா கடவுளை நம்பி வாழ்ந்தது போல நாமும்
கடவுள் நம்பிக்கையில் நிலைத்து நிற்க வேண்டும். உலகம் ஏழைகள் எனக்
கருதுவோர் மட்டில் கடவுள் தனி அன்பு கொண்டிருப்பது போல நாமும் செயல்பட
அழைக்கப்படுகிறோம்.
மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்ற உமக்கு நாங்கள் எந்நாளும் பணிந்திருக்க அருள்தாரும்.
-- அருள்தந்தை குமார்ராஜா
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' என்றார்'' (லூக்கா 1:47-48)
அன்பார்ந்த இணைதள நண்பர்களே!
-- எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற மரியா
''பேறுபெற்றவர்'' எனப் போற்றப்பட்டார் (காண்க: லூக் 1:42,45). மரியாவின்
வயிற்றில் குழந்தையாக இயேசு இருக்க, எலிசபெத்தின் வயிற்றில் குழந்தையாக
இருந்த யோவான் ''மகிழ்ச்சியால் துள்ளினார்'' (காண்க: 1:41,44).
இந்நிகழ்ச்சிகளைக் கண்ட மரியாவின் உள்ளம் இறைப் பிரசன்னத்தால் நிறைகின்றது;
அவரது இதயத்தில் நன்றியுணர்வு ததும்புகிறது; தம் இதய உணர்வுகளை மரியா
இனிமைமிகு பாடலாக வெளிப்படுத்துகிறார்: ''ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப்
பெருமைப்படுத்துகின்றது'' எனத் தொடங்குகின்ற மரியாவின் பாடல்
எலிசபெத்தின் வாயிலிருந்து புறப்பட்டிருக்கலாம், அல்லது இருவருமே இணைந்து
அதைப் பாடியிருக்கலாம். எவ்வாறாயினும் அப்பாடல் பழைய ஏற்பாட்டு
நிகழ்ச்சியொன்றை நமக்கு நினைவுபடுத்துகின்றது. அன்னா என்னும் பெண்மணி
குழந்தைப் பேறின்றி இருந்தார். அவருக்குக் கடவுளின் அருளால் குழந்தை
பிறக்கிறது. அக்குழந்தைக்கு சாமுவேல் என்று பெயர். சாமுவேலின் பிறப்பைக்
கொண்டாடிப் பாடிய அன்னா கடவுள் தம் வாழ்வில் புரிந்த அரும் செயலை வியந்து
போற்றினார். அவர் பாடிய பாடலின் சில அம்சங்கள் மரியா பாடிய பாடலிலும்
உள்ளன (காண்க: 1 சாமு 2:1-10). அதற்கு முற்பட்ட காலத்தில், கடவுள் புரிந்த
அரும் செயல்களை வியந்து தெபோரா என்னும் பெண்மணி பாடிய பாடலின்
எதிரொலிப்பையும் மரியாவின் பாடலில் காணலாம் (காண்க: நீத 2:2-31).
-- கடவுளை நம்புகின்ற மனிதரை அவர் ஒருபோதும்
கைவிடமாட்டார் என்னும் உறுதியான நம்பிக்கை மரியாவின் பாடலில்
காணக்கிடக்கிறது. அதுபோல, கடவுளைப் புறக்கணித்து, தம் மனம் போன போக்கில்
வாழ்வோர் இவ்வுலகில் அதிகாரமும் செல்வமும் கொண்டிருந்தாலும் தங்கள்
நிலையிலிருந்து ஒருநாள் வீழ்ச்சியடைவர் (காண்க: லூக் 1:52-53). மரியாவின்
மகிழ்ச்சிப் பாடலுக்கு அடிப்படையாக அமைவது யாது? கடவுளின் பார்வையில்
''அடிமை'' போல் இருந்த மரியா ஏற்கெனவே கடவுளுக்குத் தாம் அடிமை என
ஏற்றிருந்தார் (காண்க: லூக் 1:38). கடவுளுக்கு எது விருப்பமோ அதையே தம்
வாழ்வில் நிறைவேற்றுவதாகவும் கூறியிருந்தார். எனவே, கடவுளின் திருவுளம்
தம் வாழ்வில் நிறைவேறட்டும் என மரியா தம்மை முற்றிலுமாகக் கடவுளின்
கைகளில் ஒப்படைத்திருந்தார் (காண்க: லூக் 1:38). மரியாவின் தாழ்ச்சியைக்
கண்ட கடவுள் அவரை மிகவே உயர்;த்தினார். உலக மீட்பராக வந்த மெசியாவின்
தாயாகின்ற பேற்றினை அவருக்கு அளித்தார். மரியாவிடம் துலங்கிய தாழ்ச்சி நம்
வாழ்விலும் வெளிப்பட வேண்டும். மரியா கடவுளை நம்பி வாழ்ந்தது போல நாமும்
கடவுள் நம்பிக்கையில் நிலைத்து நிற்க வேண்டும். உலகம் ஏழைகள் எனக்
கருதுவோர் மட்டில் கடவுள் தனி அன்பு கொண்டிருப்பது போல நாமும் செயல்பட
அழைக்கப்படுகிறோம்.
மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்ற உமக்கு நாங்கள் எந்நாளும் பணிந்திருக்க அருள்தாரும்.
-- அருள்தந்தை குமார்ராஜா