குமரி மாவட்டம் கண்டன்விளையில் உலகிலே முதன் முதலாக புனித குழந்தை இயேசுவின் தெரசாவுக்கென்று எழுப்பப்பட்ட ஆலயம் உள்ளது. இது கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ் இயங்கிவரும் அங்கீகரிக்கப்பட்ட திருத்தலங்களில் ஒன்றாகும், ஆண்டுத்தோறும் செப்டம்பர் கடைசி வாரம் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பான விதத்தில் நடைபெறுகிறது. இங்கு புனிதையின் பேரருளியக்கம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் அன்னையின் அருள்துணையை நாடி ஏராளமான மக்கள் தமிழ் நாடு மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் வந்து புனிதையின் ஆசி பெற்று செல்கின்றனர். ஒங்வொறு வாரமும் மாலை 6.30மணிக்கு புனிதையின் நவநாள் திருப்பலியும், தினமும் காலை 6,15 க்கும், ஞாயிற்றுக்கிழமை 7,00 மணிக்கும் திருப்பலியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
புனித குழந்தை தெரசா ஆலயம் கண்டன்விளையில் 3 பெரிய தேர்களும், பிரான்சிலிருந்து புனிதையின் சொந்த சகோதரிகளால் அனுப்பிவைக்கப்பட்ட 2 பெரிய மணிகளும், ரோமிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட புனிதை மற்றும் கார்மல் அன்னையின் சொருபமும் வைக்கப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து புனிதையின் சொந்த சகோதரிகளால் அனுப்பிவைக்கப்பட்ட 2 பெரிய மணிகளிலும், நான் அனைத்து இந்தியரையும் சிறுமலருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப்பேன் என்று ஆங்கிலத்தில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கண்டன்விளையில் ஜெபமாலை அன்னைக்கென்று ஒர் ஆலயம் புனிதையின் கோயிலுக்கு எதிரில் ஜெபமாலை-மலையில் உள்ளது. இந்ந ஆலயம் பொன்விழா கண்ட ஆலயங்களில் ஒன்று, 100 ஆண்டுகளை கடந்து வானுயர எழுந்து நிற்கும் ஆலயம் கொண்டஊர் கண்டன்விளையே அழகியபூமியின் அமைவிடம் என்பதும் பெருமைக்குறிய ஒன்று. மேலும் விபரங்களுக்கு ஆலய இணையதள முகவரியை பார்க்கவும்.
www.thereseofkandanvilai.info
மற்றும் www.alagiyaboomi.forumta.net
என்றும் அன்புடன் ப.பிரைட்பாரதி
புனித குழந்தை தெரசா ஆலயம் கண்டன்விளையில் 3 பெரிய தேர்களும், பிரான்சிலிருந்து புனிதையின் சொந்த சகோதரிகளால் அனுப்பிவைக்கப்பட்ட 2 பெரிய மணிகளும், ரோமிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட புனிதை மற்றும் கார்மல் அன்னையின் சொருபமும் வைக்கப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து புனிதையின் சொந்த சகோதரிகளால் அனுப்பிவைக்கப்பட்ட 2 பெரிய மணிகளிலும், நான் அனைத்து இந்தியரையும் சிறுமலருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப்பேன் என்று ஆங்கிலத்தில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கண்டன்விளையில் ஜெபமாலை அன்னைக்கென்று ஒர் ஆலயம் புனிதையின் கோயிலுக்கு எதிரில் ஜெபமாலை-மலையில் உள்ளது. இந்ந ஆலயம் பொன்விழா கண்ட ஆலயங்களில் ஒன்று, 100 ஆண்டுகளை கடந்து வானுயர எழுந்து நிற்கும் ஆலயம் கொண்டஊர் கண்டன்விளையே அழகியபூமியின் அமைவிடம் என்பதும் பெருமைக்குறிய ஒன்று. மேலும் விபரங்களுக்கு ஆலய இணையதள முகவரியை பார்க்கவும்.
www.thereseofkandanvilai.info
மற்றும் www.alagiyaboomi.forumta.net
என்றும் அன்புடன் ப.பிரைட்பாரதி